ராஜபாளையத்தில் 52 அணியினர் கலந்து கொண்ட மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி.

அந்தோணி ராஜ்

UPDATED: Jul 8, 2024, 3:02:59 AM

Latest Virudhunagar District News

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலூர் துரைசாமிபுரம் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தென் தமிழக அளவில் ஆடவர்களுக்கான மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றது. 

13 வது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 52 அணிகளை சேர்ந்த 624 வீரர்கள் கலந்து கொண்டனர்.

District News Headlines in Tamil

நேற்று முன்தினம் தொடங்கிய போட்டிகள் முழுவதும் நாக்அவுட் முறையில் 54 சுற்றுக்களாக நடைபெற்றது. 2 ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி வீரர்கள் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.  

இறுதிப் போட்டி இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சொக்கநாதன் புத்தூர் அணியினர் முதலிடத்தையும், மீனாட்சிபுரம் அணியினர் இரண்டாம் இடத்தையும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அணியினர் மூன்றாம் இடத்தையும், தேவதானம் அணியினர் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.

முதல் 8 இடங்களை பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பைகளுடன் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான ரொக்க பரிசுகளை முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி வழங்கி வீரர்களை பாராட்டினார்.

VIDEOS

Recommended