புயல் சின்னம் எதிரொலியாக பாம்பனில் 1- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

கார்மேகம்

UPDATED: May 25, 2024, 8:06:44 AM

புயல் சின்னம் எதிரொலியாக பாம்பனில் 1- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1- ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது‌.

அதாவது புயல் உருவாகியுள்ளதை மீனவர்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் தூர முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த புயல் கூண்டானது ஏற்றப்பட்டுள்ளது

புயல் சின்னம் உருவாகியுள்ளதால் நேற்று 3 வது நாளாக ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் குறைந்த அளவிலேயே மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்

சூறைக்காற்று வீசி வருவதுடன் கடல் தொடர்ந்து சீற்றமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended