• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உதகை நகர் மான் பூங்கா அருகில் ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு.

உதகை நகர் மான் பூங்கா அருகில் ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு.

அச்சுதன்

UPDATED: May 30, 2024, 8:13:55 PM

உதகையில் இருந்து இன்று மாலை குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த மலைரயிலில் இரண்டாவது பெட்டியில் மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை பிரேக் மேன் பார்த்துள்ளார் உடனடியாக ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்

இதனைத் தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் உதகை மத்திய காவல் நிலைய காவல் துறையினர் உடலை கைபற்றி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ரயிலில் ஏற முயற்சிக்கும் போது இந்த விபத்து நடந்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் ரயில்வே மற்றும் நகர் மத்திய காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

இவரது பாக்கெட்டில் ஆதார் அட்டையோ வேறு எந்த முகவரிக்கான ஆவணங்களோ இல்லாததால் இவரது முகவரியை கண்டுபிடிக்க காவல் துறையினர் முயன்று வருகின்றனர்.

இவரது உடல் உதகை அரசு மருத்துவமனையில் உடற் கூறு ஆய்வுக்காக காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

 

VIDEOS

Recommended