• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் படர்ந்து கிடக்கும் கருவேல மரங்களால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.

நாகை அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் படர்ந்து கிடக்கும் கருவேல மரங்களால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.

செ.சீனிவாசன்

UPDATED: Jul 3, 2024, 4:52:36 AM

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் வீட்டிலிருந்து பரவைக்கு விச்சு மரத்தடி என்ற இடத்தில் உள் ரோட்டில் இருந்து நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தவர்

சாலையில் இருபுறங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து பக்கவாட்டில் வரும் வாகனம் தெரியாததால் வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினம் சென்ற இருசக்கர வாகனம் ராஜேந்திரன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 வாகனத்தில் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார்

இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நாகை அருகே சாலையில் கருவேல மரம் அகற்றப்படாததால் இருசக்கர வாகனத்தில் சென்ற பூசாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெற்குப்பொய்கை நல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended