நாகையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

சீனிவாசன்

UPDATED: Jul 22, 2024, 10:03:51 AM

Latest Nagai District News

தமிழக அரசு பொறுப்பேற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது இதனால் ஏழை எளிய பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அ.ம.மு.க

இதனைக் கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் அபிராமி அம்மன் திருவாசலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட கழக அவைத்தலைவர் கருணைநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News

இதில் முன்னாள் நகர மன்ற தலைவரும் மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர கழக செயலாளர் உலகநாதன், நாகை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரகுமான் ஷரீப் திருமருகல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முகமது பக்ருதீன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

VIDEOS

Recommended