மயிலாடுதுறையில் சாராயம் குடித்ததால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்.

செந்தில் முருகன்

UPDATED: May 29, 2024, 11:24:56 AM

District News

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி பகுதியில் பல நாட்களாக சாராய விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலாஜி (32) தொடர்ச்சியாக சாராயம் அருந்தி வந்துள்ளார்.

Latest District News 

பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் 23-ஆம் தேதி உயிரிழந்தார்.

Live District News 

இந்த நிலையில் சாராயம் குடித்ததால் தான் தங்கள் மகன் உயிரிழந்ததாக கூறி ஏராளமான பெண்கள் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் கடுவங்குடி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

தொடர்ந்து தங்கள் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இரு பெண்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Today District News

பின்னர் தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended