• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலத்திற்கு முதற்கட்ட பணி துவங்கியது

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலத்திற்கு முதற்கட்ட பணி துவங்கியது

முகேஷ்

UPDATED: Jun 19, 2024, 2:31:04 PM

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலத்திற்கு கண்ணாடி கூண்டு பொருத்துவதற்கான முதற்கட்ட பணி துவங்கியுள்ளது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை இணைப்பு கூண்டு பாலத்திற்கான கூண்டு கம்பிகள் பொருத்தும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் இணைப்பு கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

இந்தக் கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப் படுகிறது.

இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது கடல் அலையை பார்த்து ரசிக்கும் வண்ணமாக வெளி நாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

 

VIDEOS

Recommended