நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் பயன்பாட்டுக்கு வந்தது.

முகேஷ்

UPDATED: Jun 24, 2024, 7:04:07 AM

நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. தற்போது லிப்ட் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 200 வாகனங்கள் நிறுத் தும் வகையில் அமைக்கப்பட்டு வந்தது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.

இதைத் தொடர்ந்து வாகன நிறுத்தமானது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு சைக்கிளை 12 மணி நேரம் நிறுத்தி வைக்க ரூ.5-ம். 24 மணி நேரம் நிறுத்த ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போல இருசக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ. 10-ம், 24 மணி நேரத்துக்கு ரூ.15-ம். ஆட்டோக்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.20-ம், 24 மணி நேரத்துக்கு ரூ.25-ம். கார்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.25-ம். 24 மணி நேரத்துக்கு ரூ.35-ம். வேன்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ. 120-ம். 24 மணி நேரத்துக்கு ரூ.250-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

VIDEOS

Recommended