உளுந்தூர்பேட்டை நகராட்சியில் ஓராண்டு ஆகியும் புதிய பேருந்து நிலையம் அமைக்க தாமதம்.

கோபிநாத் பிரசாந்த்

UPDATED: Jul 9, 2024, 7:12:24 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டு மேலாகியும் இதுவரை பேருந்து நிலையம் அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான வேலையும் துவங்கப்படவில்லை.

உளுந்தூர்பேட்டைக்கு புதிய பேருந்து நிலையம் வருமா வராதா???????? என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இதுவரை ஏமாற்றத்தை அளித்து வருகிறதாக உளுந்தூர்பேட்டை வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended