• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அரசு வேலை வாங்கித் தருவதாக 14 லட்சம்  ஏமாற்றிய சத்துணவு ஊழியர் அமைப்பாளர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி வரதராஜன்

அரசு வேலை வாங்கித் தருவதாக 14 லட்சம்  ஏமாற்றிய சத்துணவு ஊழியர் அமைப்பாளர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி வரதராஜன்

ரமேஷ்

UPDATED: Jul 20, 2024, 8:34:35 AM

கும்பகோணம்

கும்பகோணம் அருகே அம்மாபேட்டை அருகில் உள்ள விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். (63) இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜன், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் 7 லட்சம் ரூபாயும், திருபுவனத்தைச் சேர்ந்த முத்து என்பவரிடம் 7 லட்ச ரூபாயும், பெற்றுள்ளார்.

India News Updates in Tamil 

வரதராஜன் கூறியவாறு அரசு வேலையும் வாங்கி தரவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை .

இதற்கிடையில் ,  வரதராஜன் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட நபர்களான வினோத் மற்றும் முத்து ஆகியோர் வரதராஜனை பிடித்து திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

News

வினோத் மற்றும் முத்து ஆகியோர் அரசு வேலை வாங்கி தர வேண்டி வரதராஜனிடம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு சாக்கோட்டை என்ற இடத்தில் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து ,  மோசடி புகார் தொடர்பாக வரதராஜனை கைது செய்தனர்.

Latest Crime News In Tamil

மேலும் வரதராஜனை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தி படுத்தினர் . 

வரதராஜனை எதிர்வரும் முதல் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

VIDEOS

Recommended