வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.

சண்முகம்

UPDATED: Jun 26, 2024, 6:12:33 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெருமாத்தூர் பாலு நகரில் உள்ள செல்வக்குமார் இவரது மனைவி சூர்யா வயது 22 இவர்க்கு 17..9.23 அன்று திருமணம் நடைபெற்றது 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்து பெரியோர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தனர்

செல்வகுமார் சிதம்பரம் பஸ்டிப்போவில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார்,  திருமணமாகி 9 மாதங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்ற காரணத்தினால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் ஐந்து லட்சம் பணம் 15 பவுன் நகை வேண்டுமென்று கணவர் சித்திரவதை செய்துள்ளார்

கணவரின் அண்ணன் லெனின் மற்றும் அவரது மனைவி அலமேலு இவர்கள் சேர்ந்து பணம் நகை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்கள்

இதனால் மனம் உடைந்த சூர்யா தன்னுடைய தாயிடம் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்

செல்வகுமார் தினசரி இரவு கஞ்சா  போதையில் வந்து நகை பணம் கேட்டு தொந்தரவு படுத்துவதாக கூறப்படுகிறது

ஒரு வாரத்திற்கு முன்பு திருமண கடனை அடைக்க வேண்டும் உங்க வீட்டில் இருந்து ரூபாய் 5 லட்சம் பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக இந்த விஷயத்தை தனது தாயிடம் தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார்

நேற்று இரவு 9:30 மணி அளவில் புவனகிரி காவல் நிலையத்திலிருந்து தங்கள் மகள் தூக்கு மாட்டி இறந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் எனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர்

இது தொடர்பாக சிதம்பரம் சப் கலெக்டர் நேரடியாக வந்து விசாரணை செய்து உள்ளார் தற்பொழுது இவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

இதனிடையே இறந்து போன சூர்யாவின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட இடத்தில் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் பெண் வீட்டாரிடம் உங்களுக்கு இங்க என்ன வேலை என்று அவர்களை அடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended