• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பூந்தமல்லியில் மனு கொடுக்க சென்ற பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் அலுவலகத்தின் வாயிலினிலேயே மனுவை வைத்து விட்டு சென்றனர்.

பூந்தமல்லியில் மனு கொடுக்க சென்ற பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் அலுவலகத்தின் வாயிலினிலேயே மனுவை வைத்து விட்டு சென்றனர்.

சுந்தர்

UPDATED: Jun 21, 2024, 8:21:56 PM

பூவிருந்தவல்லி நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியில் மழை காலங்களில் மழை நீர் சூழ்வது வாடிக்கையாய் உள்ளது.அந்த பகுதியில் தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை போடும் பணி நடைப்பெற்று வருகிறது.

மழை நீர் கால்வாய் பணிகளை முடித்து விட்டு சாலை அமைக்க வேண்டும் என வலியுறித்தி அப்பகுதி வாழ் மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் யாரும் இல்லாததால் கொண்டு சென்ற கோரிக்கை மனுவை அலுவலகத்தின் வாயிலிலேயே வைத்து விட்டு சென்றனர்.

அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் கோரிக்கை மனுவை மக்கள் அலுவலகத்தின் வாயிலிலேயே வைத்து விட்டு சென்ற நிகழ்வு அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

 

VIDEOS

Recommended