குன்றத்தூர் தாலுகாவில் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அரசு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுந்தர்

UPDATED: Jun 25, 2024, 9:06:57 AM

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் நீதிபதி வெங்கடேசன் தலைமையேற்று, துணை கலெக்டர் வெற்றிவேல், குன்றத்தூர் தாசில்தார் நாராயணன் முன்னிலையில் கொளப்பாக்கம் உள்வட்ட ஊராட்சிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பன்தாங்கல் பெரியப்பணிச்சேரி, பரணிபுத்தூர் பொது மக்களிடம் வீட்டுமனை பட்டா மற்றும் ரேஷன் கார்டு திருத்தம் ,பெயர் மாற்றம், ரேஷன் கார்டு போன்ற கோரிக்கை மனுக்களை பெற்று சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

இதில் துணை தாசில்தார் சரவணன், ஸ்ரீதர், தலைமை நில அளவையர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர்கள் அருண்குமார், அருள் அரசு ,சுமதி, பிரியங்கா உட்பட கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

VIDEOS

Recommended