பெரும்பாக்கத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த இளைஞர்.

நெல்சன் கென்னடி

UPDATED: May 22, 2024, 11:38:36 AM

Chennai News

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தன்(30), இவர் மும்பையில் இருந்து சில நபர்கள் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி, பெரும்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் போதைக்காக மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 

இதனால் அப்பகுதி மக்கள் அரவிந்தன் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்வதை பெரும்பாக்கம் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். 

அதன் பேரில் பெரும்பாக்கம் காவல்துறையினர் அரவிந்தன் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் 1000 வலிநிவாரணி மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். 

Today Chennai News

பின்னர் அரவிந்தனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பணத்தாசையில் முதல் முறையாக மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து சிக்கிக் கொண்டதாக கூறினார்.  

கைது செய்யப்பட்ட அரவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

  • 1

VIDEOS

Recommended