• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு பள்ளி வளாகம் முழுவதும் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி.

பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு பள்ளி வளாகம் முழுவதும் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி.

சுந்தர்

UPDATED: Jun 18, 2024, 6:11:48 AM

நேற்று இரவு முழுவதும் இடி, மின்னல் பலத்த காற்றுடன் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது

இந்த நிலையில் பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.

இதன் காரணமாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தேங்கியுள்ள மழை நீரில் மாணவர்கள் செல்லும் நிலை உள்ளது

குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended