கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.

கோபி பிரசாந்த்

UPDATED: May 29, 2024, 2:31:35 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் ஒன்றிய ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை ஊராட்சி ஒன்றிய அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் பாப்பாத்தி நடராஜன் முன்னிலை வகித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 ஆண்டுகள் பதவி காலம் முடிவடையாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து தேர்தல் நடத்துவது என்ற முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்.

தேர்தல் நடத்துவதை மறு பரிசீலனை செய்யாத நிலையில், எங்கள் உரிமைகளை நிலை நாட்ட நீதிமன்ற வழக்கு தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

  • 1

VIDEOS

Recommended