கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு.

ராஜா

UPDATED: May 31, 2024, 5:23:04 AM

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மணி என்பவரிடம் கடன் பெற்ற நிலை கணேசன் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கணேசனின் மகள் சத்திய (வயது19) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

கணேசன் பணம் கொடுக்க முடியாத நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு கணேசனின் மகள் சந்தியவை பணம் கொடுத்த மணி என்பவர் தூண்டுதலின் பேரில் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பழனி, நவநீத், சுரேஷ், ஹரி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சந்தியாவை காரில் கடத்திச் சென்று காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் படம் பிடித்ததாகவும் அதை வெளியில் தெரிவித்தால் வலைதளங்களில் போட்டு விடுவதாக மிரட்டியதாக பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களும் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

குறிப்பு: எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட இளம் பெண் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் அனைத்து மகளிர் நகர் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் பெண்ணின் பெயரையோ அல்லது பெண்ணின் தந்தையின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது. 

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் முழுமையான விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை.

 

VIDEOS

Recommended