• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து கட்டாயமாக அனைவரையும் கைது

திருவள்ளூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து கட்டாயமாக அனைவரையும் கைது

சுரேஷ் பாபு

UPDATED: Jun 22, 2024, 10:59:49 AM

பாஜகவினரின் கைது நடவடிக்கையை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை பயிற்சி உதவி ஆய்வாளர் ரகுமான் என்பவர் ஒருமையில் பேசி செல்போனை தட்டி விட்டு வீடியோ எடுக்க கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது., 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறியதாக தமிழ்நாடு அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு 

நேற்று வரை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி 

திருவள்ளூர் நகர போலீசார் ஏற்பாடுகள் செய்த பின்பு தற்பொழுது அனுமதியை ரத்து செய்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது,.

ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட ஜெனரேட்டர் டேபிள் வாட்டர் என அனைத்தையும் போலீசார் அப்புறப்படுத்தினர்,

இந்நிலையில் பாஜகவினரை கட்டாயமாக தூக்கி சென்று பேருந்தில் ஏற்றியதால் சம்பவ இடத்தில் பரபரப்பு, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை ஒருமையில் காவல்துறையினர் ஒருமையில் பேசி செல்போனை தட்டி விட்டு வீடியோ எடுக்க கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended