• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் 87 கோடி ரூபாய் மோசடி.

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் 87 கோடி ரூபாய் மோசடி.

சுரேஷ் பாபு

UPDATED: Jul 2, 2024, 4:48:34 AM

திருவள்ளூர், ஜூலை 2: ஒரு ஒரு லட்சம் கட்டினால் ஒரு 4 லட்சம் திருப்பி வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1930 பேரிடம் ரூ 87 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்ற பழமொழிக்கேற்ப திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் ஸ்வர்ணதாரா குழுமம் என்ற பெயரில் பிரபல மோசடி நிதி நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏராளமானவர் பணத்தை செலுத்தியுள்ளனர். 2015 முதல் 2018 வரை வட்டி பணத்தை திருப்பி தந்துள்ளனர். 

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்வர்ணதாரா நிறுவனத்திற்கு திருவள்ளூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கன (76) என்பவரை பிசினஸ் அசோசியேட்டாகவும், மற்றும் அவரது மனைவி வசந்தி, மகள் பவானி மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டு கொண்டு

திருவள்ளூர், பெரம்பலூர், சென்னை, அரியலூர், வேலூர் மற்றும் பிற மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து ஸ்வர்ணதாரா குரூப் ஆஃப் கம்பெனிக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என கிட்டத்தட்ட 1930 பேரிடமிருந்து ரூ 87 கோடி ரூபாய் வரை வசூல் செய்து உள்ளனர். 

2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் அறிவித்தபடி பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர். மூன்றாண்டுகளுக்குப் பிறகு வட்டிப் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் பாண்டுரங்கனிடம் கேட்டபோது நீங்கள் செலுத்திய பணத்தை ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்தில் செலுத்தியதாகவும் அவர்கள் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஸ்வர்ணதாரா நிதி மோசடி குறித்து சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசில் கடந்த மே மாதம் கொடுத்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடரங்க குப்தா, இவரது மனைவி கவிதா சக்தி, இயக்குனர்கள் ஹரிஹரன், விஜயஸ்ரீ குப்தா, அவர்களது மகள் பிரதீஷா குப்தா, ஜெய் சந்தோஷ், ஜெய் விக்னேஷ் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் திருவள்ளூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கனை நம்பி கிட்டத்தட்ட 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு கிட்டத்தட்ட 1930 நபர்களிடமிருந்து 87 கோடி ரூபாய் வரை வசூல் செய்த பணத்தை தராமல் ஏமாற்றியதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 

ஸ்வர்ணதாரா நிதி குழுமத்தில் இந்த பணத்தை செலுத்தினாரா என்பது சந்தேகமாக இருப்பதாகவும், அவர் கோடி கணக்கில் கமிஷன் பெற்று இருப்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ,வியாபாரிகள் என 1930 பேரிடம் 87 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended