ஒன்றிய அரசை கண்டித்து கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில்

ஜெயராமன்

UPDATED: Aug 6, 2024, 6:29:19 PM

திருவாரூர்

கட்டுமான துறையை புறக்கணித்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

District News & Updates in Tamil

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கட்டுமானத்துறை வளர எந்த அறிவிப்பும் வெளியிடாத ஒன்றிய அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான துறை

மேலும் கட்டுமான துறைக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், கட்டுமானத்துறைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும், கட்டுமான விலை நிர்ணய குழு அமைக்க வேண்டும், கட்டுமான பொறியாளர்களுக்கு பொறியாளர் கவுன்சில் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest District News in Tamil

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சேகர், துணைத்தலைவர் சிங்காரவேலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended