கர்ப்பிணி மனைவியை பார்க்க கோயம்புத்தூருக்கு பைக்கில் சென்ற கணவர் லாரி மோதி பலி

பரணி

UPDATED: May 10, 2024, 5:23:43 PM

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 30) இவர் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. உஷா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மனைவியை பார்க்க சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூருக்கு புறப்பட்டுள்ளார் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேல்விஷாரம் பைபாஸ் சாலை அருகே வரும்போது எதிரே வந்த லாரி நந்தகுமார் மீது மோதியது.

இதில் அவரது கால் துண்டாகி உயிருக்கு போராடினார் அங்கிருந்தவர்கள் ஆற்காடு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு நகர உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி நந்தகுமார் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை பார்க்கும் ஆசையில் பைக்கிலேயே சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற கணவன் லாரி மோதி பலியான சம்பவம் ஆற்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended