வேதாரண்யம் அருகே கடன் தொல்லையால் கணவன் மனைவி மின்சார கம்பியைபிடித்து தற்கொலை.

செ.சீனிவாசன்

UPDATED: Aug 12, 2024, 8:16:47 AM

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்

தாலுக்கா செண்பகராய நல்லூர் பகுதி சேர்ந்தவர் முத்து மாசிலாமணி இவரது மகன் குமரேசன் வயசு 35 இப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்

இவரது மனைவி புவனேஸ்வரி வயது 28 வேதாரண்யத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்

இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு ஆண்டுகளாகிறது இவர்களுக்கு குழந்தை இல்லை மளிகை கடை நடத்தி வந்ததில் குமரேசனுக்கு கடன் அதிகமானது

தற்கொலை

இதனால் மளிகை கடை நேற்று இரவு மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார் கடன் தொல்லையால் மனம் உடைந்த தம்பதியினர் மாடியில் இருந்த மின்சார கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டனர் 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி இருவரும் உடலையும் உடற்கூறு ஆய்வுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended