• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குரங்கணி வனப்பகுதியில் கனமழை பொதுமக்கள் கொட்டகுடி ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை.!!

குரங்கணி வனப்பகுதியில் கனமழை பொதுமக்கள் கொட்டகுடி ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை.!!

ராஜா

UPDATED: Jul 30, 2024, 7:54:35 AM

தேனி மாவட்டம் போடி 

அருகே குரங்கணி வனப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அணை பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து செல்கிறது. 

கொட்டக்குடி ஆறு

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை பொழிவு இல்லாமல் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட கொட்டக்குடி ஆற்றில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.

Theni News & Live Updates

அதிக அளவில் வரும் தண்ணீரானது போடி பகுதியில் உள்ள குளங்களுக்கு ராஜ வாய்க்கால் மூலம் அனுப்பப்பட்டு வரும் நிலையில் உபரி நீரானது அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டு வைகை அணைக்கு செல்கிறது. 

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் கொட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended