பத்து மணி ஆகியும் வங்கி திறக்காததால் பெரும் பரபரப்பு.

சண்முகம்

UPDATED: Aug 17, 2024, 7:09:55 PM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணத்தில் இந்தியன் வங்கி மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் போடுவதற்கும் மற்றும் நகை மீட்பதற்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர் வந்த நிலையில் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் இந்தியன் வங்கி மேலாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை அலைக்கழிக்க வைத்தனர்.

இந்தியன் வங்கி 

இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்  சனிக்கிழமை வங்கி ஒரு மணி வரை மட்டுமே செயல்படும் இங்குள்ள விவசாயிகள் வங்கியில் காத்திருந்த நிலையில் சுமார் 11 மணி வரை வங்கி திறக்கப்படவில்லை இதனால் பொதுமக்கள் வெளியில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது

District News & Updates in Tamil

அதோடு ஸ்ரீமுஷ்வதை சுற்றி கள்ளிப்பாடி காவனூர் ஸ்ரீநெடுஞ்சேரி குணமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிபிசி நெல் குடோனில் தங்களது நெல் மூட்டைகளை விநியோகம் செய்த நிலையில் அனைவருமே ஸ்ரீமுஷ்ணம் இந்தியன் வங்கி கிளையில் பணம் பரிவர்த்தனை நடைபெறும் இரண்டு நாள் பரிவர்த்தனை இல்லாமல் விவசாயிகள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஸ்டேட் பேங்க் அமைத்துக் கொடுக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதில் அரசு நேரில் ஆய்வு செய்து கூடுதலாக ஒரு வங்கி அமைத்து தந்தால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது

 

VIDEOS

Recommended