• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆரணியில் 3 நாட்களாக தொடர் கனமழை கால்வாய் ஆக்கிரமிப்புகளால் குடியிருப்புகளில் தேங்கிய நீர் பொதுமக்கள் அவதி.

ஆரணியில் 3 நாட்களாக தொடர் கனமழை கால்வாய் ஆக்கிரமிப்புகளால் குடியிருப்புகளில் தேங்கிய நீர் பொதுமக்கள் அவதி.

அஜித் குமார்

UPDATED: Aug 12, 2024, 7:55:37 PM

ஆரணி 

ஆரணி பாளையம். விஏகே நகர். ஜெயலட்சுமி நகர், தேன் குவிநகர் கே.கேநகர், பெரியார் நகர், கேசிகே நகர், மற்றும் ஆரணி அடுத்த இரும்பேடு, முள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய், பக்ககால்வாய்களை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீட்டு மனைகளாகவும், கடைகள், வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால், மழைநீர் வெளியேற வழியில்லாத தால் கடந்த சில நாட்க ளாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து குளம் போல் தேங்கி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3. தினங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் இடியு டன் கூடிய கனமழையும், சில இடங்களில் விட்டு விட்டுலோசான மழையும் பெய்து வருகிறது. 

கனமழை

தொடர் கனமழையால் அணைகள் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் உன் ளிட்ட நிர்நிலைகளுக்குநீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆரணி பகுதிகளில் கடந்த 3 நாட்க ளாக காலை முதல் மலை வரை வெயில் சுட்டெரித் தாலும், பின்னர், மாலை யில் வானம் மேக மூட் டத்துடன் காணப்பட்டு, மாலையில் தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்கிறது.

Latest Tiruvannamalai District news in Tamil

பின்னர் இரவில் இடி யுடன் கூடிய களமழை விடியவிடிய பெய்து வருகிறது.இதனால், சாலைக தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுவதால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரிகள், குளங்கள், நிரம்பி வருகிறது. 

மக்கள் செல்ல கடும் சிரமப்பட்டு  வருகின்றனர். மேலும், சில பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து சூழ்த்துள்ளதால் அப்குதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Aarni News

எனவே, ஆரணி நகராட்சிக்குட்பட்ட பல் வேறு வார்டுகளில் குடியி குப்பு பகுதிகளில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்பு களை அகற்ற சம்மத்தப் பட்ட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேபோல், தொடர் மழையால் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் சிலதினங்களாக மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

திருவாண்ணாமலை மாவட்டம் 

திருவாண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழை யின் அளவு, திருவண்ணா மலை 17.2 மி.மீ. செங்கம் 962 மி.மீ, போளூர் 35 மி.மீ. ஜமுனாமரத்தூர் 38 மிமீ. கலசப்பாக்கம் 45 மி.மீ, தண் ராம்பட்டு 516மி.மீ ஆரணி 37 மிமீ, செய்யார் 48 மிமீ. வந்தவாசி 8மி.மீ.கீழ்பென் னாத்தூர் 60.6, வெம்பாக் கம் 15 மிமீ, சேத்பட் 355மிமீ என மாவட்டம் முழுவதும் மழையின் அளவு 487.2 மிமீ பதிவாகி இருந்தது. 

இதில், அதிகபட்சமாக செங்கத் தில் 96.2மி மீட்டர் மழை பாதிவாகியது.

 

VIDEOS

Recommended