மீன்பிடி தடைக்கால சீசன்‌ இன்று தொடக்கம் 2000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது

கார்மேகம்

UPDATED: Apr 14, 2024, 10:03:55 AM

தமிழகம் முழுவதும்‌ ஆண்டு தோறும் ஏப்ரல்  15 முதல் ஜீன்‌ 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகால சீசன்‌ ஆகும்

இந்த 2 மாத சீசனில்‌ கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்யும் சீசனாகும்

இந்த ஆண்டு 61 நாட்கள் மீன்பிடி தடைகால சீசன் அதனால்‌ இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை காலம் தொடங்குகின்றது

தடைக்காலம் இன்று நள்ளிரவு தொடங்குவதைத் தொடர்ந்து ராமேஸ்வரம்  பகுதியில் நாளை முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க‌ செல்ல மாட்டார்கள்

இதனால் நேற்று 700 கற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறை முக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிருத்தி வைக்கப்பட்டுள்ளன

அது போல் பாம்பன் மண்டபம் தொண்டி சோழியாக்குடி, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும்‌ சுமார் 2000  மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது

இந்த தடைக்கால சீசனில் மீனவர்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended