பெரம்பலூர் அருகே செஞ்சேரியில் மீன்பிடி திருவிழா

மாரியப்பன்

UPDATED: May 8, 2024, 6:19:40 AM

Today Preambular News in Tamil

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராம ஏரியில் கடந்த 9 ஆண்டுகளாக மேலாக மீன்பிடிக்கவில்லை. இந்த நிலையில் தண்ணீர் வற்றிய நிலையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இதில் செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், அம்மாபாளையம், ஈச்சம்பட்டி,அரும்பாவூர், பூலாம்பாடி,எசனை, வெள்ள கருப்பட்டி, உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட சுற்றுப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வலை, கொசுவலை, கத்தால், உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.

Online Preambular News in Tamil

கெண்டை,விரால்,குரவை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தது.சுமார் 5 கிலோ எடையுள்ள மீன்களும் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்பிடித்து சென்றனர்.

 

  • 1

VIDEOS

Recommended