சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 5, 2024, 6:00:46 AM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் (47). இவர் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் இவரது பெயிண்ட் கடையில் திடீரென கரும்புகை வெளியேறி தீ பிடித்து எரிய தொடங்கின. இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கும், ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் கடையில் பெயிண்ட் ,ரசாயனம் போன்ற பொருட்கள் இருப்பதால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென எரிந்தன.

இதையடுத்து ஜேசிபி வாகனம் மூலம் கடையின் ஷட்டரை உடைத்து, கடையில் இருந்த பெயிண்ட் பொருட்களை வெளியே அகற்றினர்.

தொடர்ந்து தண்ணீரை பீச்சி அடித்து அருகில் உள்ள குடியிருப்பு , தனியார் ஏடிஎம் மையத்துக்கு தீயை பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. 

இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடையின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மின் பொறி கிளம்பிய, சில மணி நேரத்தில் கடையில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட வருகிறது.

VIDEOS

Recommended