• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பெரியகுளம் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி.

பெரியகுளம் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி.

ராஜா

UPDATED: May 10, 2024, 7:25:44 PM

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்தானது அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் நீர்வரத்து வரும்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக முற்றிலும் மழை பெய்யாத நிலையில் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்பட்டது. 

இதனால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பகுதிகள் குறைந்த அளவு நீரில் பல மணி நேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தற்பொழுது அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து அருவியில்ல் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended