அறந்தாங்கியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.

இளையராஜா

UPDATED: Aug 18, 2024, 11:14:23 AM

புதுக்கோட்டை மாவட்டம்

அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தகவல்.

மாலை மின்வாரிய ஒப்பந்த பணியாளர் செந்தில்குமார் வயது 40 எரிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிலட்டூரில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார்

அவரை கம்பத்தில் ஏறச் சொன்னவர் ஃபோர் மேன் மின்மாற்றியை அணைக்காமல் மின்சாரம் இல்லையே என்ற தைரியத்தில் மின் கம்பத்தில் ஏறச் சொல்லி இருக்கிறார் கவனக்குறைவாக

ஆனால் 5 மணிக்கு பதிலாக 4.45 மின்சாரம் சப்ளை வந்துவிட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் பலியானார். இவருக்கு திருமணம் ஆகி ரம்யா மகேஸ்வரி வயது 33 என்ற மனைவியும் தர்ஷன் வயது 11 அகிலேஷ் வயது 8 குழந்தைகளும் உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை எதிரில் பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended