போலீசாரை கண்டவுடன் லாரியை நிறுத்தி ஓட்டம் பிடித்த ட்ரைவர்.

அஜித் குமார்

UPDATED: Jul 26, 2024, 7:28:28 AM

திருவண்ணாமலை மாவட்டம்

ஆரணி தாலுகா இன்ஸ் பெக்டர் ராஜாங்கம் தலைமையில் எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் நேற்று அதி காலை வடுக்கசாத்து பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை மடக்க முயன்றனர். போலீசை பார்த்ததும் சாலையில் லாரியை நிறுத்திவிட்டு டிரை வர்தப்பிஓடிவிட்டார். 

மணல் கடத்தல்

லாரியை சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், வடுக்கசாத்து ரவி மகன் மணிகண்டன்(26) மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் மணிகண்டன் மற்றும் லாரி உரிமையாளரை தேடிவருகின்றனர்.

 

VIDEOS

Recommended