• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திண்டுக்கல் பழனி, ஒட்டன்சத்திரம் தாலுகாவில் இலவசமாக மோட்டார் பைக் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு.

திண்டுக்கல் பழனி, ஒட்டன்சத்திரம் தாலுகாவில் இலவசமாக மோட்டார் பைக் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு.

கோபிநாத்

UPDATED: Aug 21, 2024, 10:06:38 AM

திண்டுக்கல் மாவட்டம்

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பைக்குகளை வழங்குவதற்கான நேர்காணல் முகாம் வருகிற 27.08.24 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணிமுதல் மதியம் ஒருமணிவரை பழனி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் இடுப்பிற்கு மேல் நல்ல நிலையில், கைகள் நன்றாக இயங்கக்கூடிய, 60 சதவீதமும் அதற்கு மேலும் ஊனமுடைய ஒரு கால் அல்லது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்று பயன்பெற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான ஒரிஜினல் அடையாள அட்டை, ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் வேலைக்கு செல்லும் சான்று, படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கட்டாயம் மாற்றுத்திறனாளிகள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

குறிப்பு : உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள், பக்கவாதத்தால் கைகள் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை குறைபாடு உடையவர்கள், காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் இம்முகாமில் பங்கேற்க வேண்டாம்.

A.காளீஸ்வரி – நகர தலைவர், P.தங்கவேல் – நகர செயலாளர், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு. Cell – 9360012625, 9360980745.

 

VIDEOS

Recommended