• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சி - தஞ்சை சர்வீஸ் சாலை நாளை வழக்கின் தன்மை பொறுத்து தொடர் போராட்டங்கள் ஈடுபட உள்ளோம் - சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர்.

திருச்சி - தஞ்சை சர்வீஸ் சாலை நாளை வழக்கின் தன்மை பொறுத்து தொடர் போராட்டங்கள் ஈடுபட உள்ளோம் - சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர்.

JK

UPDATED: Sep 29, 2024, 1:48:15 PM

திருச்சி 

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கிமீ தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்காததால் தொடர்ந்து பல்வேறு உயிரிழப்புகள், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

உடனடியாக சர்வீஸ் சாலையை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி 12ஆண்டுகளாக சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருச்சி பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர் 

சர்வீஸ் ரோடு விரைந்து அமைக்க வேண்டி இந்தகூட்டமைப்பு பல்வேறு அறப்போராட்டங்கள் நடத்தியும் முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேஎன் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்தும் சாலை அமைப்பதாக உறுதி கூறுகிறார்கள் ஆனால் அதன்பின்னர் எந்தஒரு நடவடிக்கையும் இல்லை. 

தமிழக முழுவதும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வியாபார கூட்டமைப்பின் அழுத்தத்தினாலும், பணபலத்தினாலும் ஆட்சியாளர்கள் சர்வீஸ்ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. 

Latest Trichy District News

இந்த 14.5 கிலோமீட்டர் தூரத்தில் 30% மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும், ஆனால் இதுவரையிலும் மேற்கொள்ளாததால் 5000க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் ஏற்பட்டு 1000-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர், 2000க்கு மேற்பட்டோர் விபத்தில் கை, கால்களை இழந்துள்ளனர். 

இவ்வாறு செயல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதை மக்கள் விரோத செயலாகவே கருதுவதாகவும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத பறக்கும் பாலம் திட்டங்களை அறிவிக்கும் தமிழக அரசு, மக்கள் கேட்கிற சர்வீஸ் சாலையை அமைத்து விட்டு பின்னர் நீங்கள் வியாபாரியில் கூட்டமைப்புக்கு தகுந்தார் போல உயர்மட்ட பாலங்களையோ கட்டிக் கொள்ளட்டும்.

மேலும், தொடர் போராட்டங்களுக்குப் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காத பட்சத்தில் பணிகள் காலதாமதம் ஆவதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக பொது நலவழக்கு தொடரப்பட்டு, நாளைய தினம் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கு விசாரணையை பொறுத்து அடுத்தகட்டமாக, தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பேட்டியின் போது சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர் உடன் இருந்தனர்.

VIDEOS

Recommended