• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராகுல் காந்தியை அவதூறாக பேசி வரும் RSS - சித்தாந்தம் கொண்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கண்டன ஆர்ப்பாட்டம் 

ராகுல் காந்தியை அவதூறாக பேசி வரும் RSS - சித்தாந்தம் கொண்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கண்டன ஆர்ப்பாட்டம் 

சசி குமார்

UPDATED: Sep 17, 2024, 7:10:26 PM

கிருஷ்ணகிரி மாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உத்தரவின்படி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேசத்துரோகி என பேசிய RSS சித்தாந்தம் கொண்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் எச் ராஜா மற்றும் மகாராஷ்ரா மாநிலத்தை சேர்ந்த தர்விந்தர் சிங்மார்வா ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வழியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்ற இந்தக் கண்டன ஆர்பாட்டம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் ஏகப்பவாணன், மாநில பொதுக்குழு ரகு, மாநில செயலாளர் ஆறுமுகம், முன்னால் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில், கிருஷ்ணமூர்த்தி, குமாரவேல், நாரயண மூர்த்தி, முன்னால் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்  துரை என்ற துரைசாமி, நகர தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தன.

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின்  போது ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச். ராஜா கொச்சைப்படுத்தி பேசுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளை பரப்புவது, இது மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் எச். ராஜாவின் பேச்சை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கேபிநாத் எச்சரிக்கை விடுத்து கண்டன உரை ஆற்றினார்.

மேலும் பலர் கலந்துக் கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

 

VIDEOS

Recommended