சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் !

அந்தோணி ராஜ்

UPDATED: Aug 29, 2024, 7:09:29 PM

விருதுநகர் 

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய பேராளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன பேராளி கிராமத்தில், மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 27 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பதற்காக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன்  வந்திருந்தார்.

திமுக

அப்பொழுது அங்கு இருந்த பொதுமக்கள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் மச்ச ராஜா தலைமையில் தங்கள் பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தோ, மாநில அரசு நிதியில் இருந்தோ தற்போது வரை சாலை அமைத்து தரவில்லை எந்த ஒரு பணியும் செய்யவில்லை 

ஆனால் மத்திய அரசு அளித்த நிதியின் மூலம் செய்யப்பட்ட பணிகளை மட்டுமே திறந்து வைக்க திமுக சட்டமன்ற உறுப்பினர் வருவதாக கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர் எ ஆர் ஆர் சீனிவாசன் அவர்களிடம் கேள்வி எழுப்பினர்

Breaking News

அதைத் தொடர்ந்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்கள் காரில் ஏறி புறப்பட்டார் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது

 

VIDEOS

Recommended