• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையம் சங்கம் சார்பாக சென்னை மண்டல கோரிக்கை விளக்கவுரை கூட்டம்.

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையம் சங்கம் சார்பாக சென்னை மண்டல கோரிக்கை விளக்கவுரை கூட்டம்.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 18, 2024, 9:51:28 AM

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் அமைந்துள்ள MKS திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பாக சென்னை மண்டலம் கோரிக்கை விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியின் தலைமை திருவள்ளூர் மாவட்ட தலைவர் எம் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோரிக்கை விளக்கவுரை அகில இந்திய தலைவர் கே கணேசன், மாநிலத் தலைவர் எஸ் மதுரம், மாநிலத் தலைவர் எஸ். சுரேஷ் (ஆதி திராவிடர் நலத்துறை) ஆர். போஸ் (ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர்) தொடர்ந்து நிகழ்ச்சியில் கோரிக்கை விளக்கவுரை ஆற்றிய அகில இந்திய தலைவர் k. கணேசன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,

முக்கிய கோரிக்கையாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மண்டலத்தில் திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,

21 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துபழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தலைவர் R. வெங்கடேசன் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் G.ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் எம் சண்முகம் மாவட்ட, மாவட்டச் செயலாளர் எம் ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் எஸ் பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் எம்.நாகலிங்கம்,w. சாந்தம்,

k. ராஜ்குமார் மாவட்ட துணைச் செயலாளர்கள் R. முரளி தாஸ், பி.ராஜேஷ் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் R.தெய்வசிகாமணி மாவட்ட தணிக்கையாளர் A. மணி மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் V. நாகராஜன் G. ஜேம்ஸ் மாவட்ட பிரச்சார செயலாளர் M. வினோத் குமார் மாவட்ட மகளிர் அணி M. அம்பிகா G.உமா மகேஸ்வரி ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட செயலாளர் R. கமலக்கண்ணன் பிசிஎம்பிசி துறை C.பாஸ்கர் 

அரசு பொது சுகாதார நிறுவனம் பூந்தமல்லி கிளை சங்கம் தலைவர் k.ராஜ்குமார், செயலாளர் R. ஜெகநாதன், பொருளாளர் k. விஜய் நிர்வாகிகள் உதயகுமார் லோகநாதன், வினோத், மோகன், விஷ்ணு, ராஜா ,அருண் , சத்யநாராயணன், நாகராஜ், மாரியப்பன் ,சாந்தி, ஜெயக்கொடி, ரேவதி, மைதிலி, ஆர்த்தி ,சரிதா, மற்றும் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended