பூந்தமல்லி தனி கிளை சிறையில் கைதியின் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்.

S.முருகன்

UPDATED: Jul 11, 2024, 6:22:00 PM

District News & Updates in Tamil

பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் தனி கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த தனி கிளை சிறையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில் இன்று காலை சிறை கண்காணிப்பு அதிகாரி ஜேம்ஸ் தலைமையில் தனி கிளைச் சிறையில் உள்ள கைதிகளின் ஒவ்வொரு அறையிலும் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

Today Latest District 

அப்போது கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாறன் என்பவரது அறையில் சோதனை செய்த போது ஒரு செல்போன், சிம் கார்டு, இரண்டு பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதையடுத்து அந்த அறையில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து பூந்தமல்லி போலீசில் சிறை காவலர்கள் புகார் அளித்தனர். 

பூந்தமல்லி போலீசார் செல்போன், சிம் கார்டுகளை கொண்டு வந்து கொடுத்த நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேர் மற்றும் பிரபல ரவுடி படப்பை குணா உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இந்த தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிறை வளாகத்தில் இருந்து செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended