• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் அருகே மாநில அரசு நிலப்பட்டா வழங்காததால் நடுவன் அரசின் பி.எம்.ஏ.ஒய் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாத பயனாளிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

திருவள்ளூர் அருகே மாநில அரசு நிலப்பட்டா வழங்காததால் நடுவன் அரசின் பி.எம்.ஏ.ஒய் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாத பயனாளிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

S.முருகன்

UPDATED: Jun 27, 2024, 6:48:23 PM

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்ட மந்திரி, வல்லூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 280 பேருக்கு, நடுவன் அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோ ஜனா (பி.எம்.ஏ.ஒய்) என்ற அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது,

இதில் மேற்கண்ட இரு கிராமங்களைச் சேர்ந்த 195 பேருக்கு நில பட்டா இல்லாததால் நடுவன் அரசின் திட்டத்தின் கீழ் நிதியைப் பெற்று வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் தொடர்ந்து நிலப்பட்டா வழங்க கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பட்டா கோரி மனு அளித்தும் அதன் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் தெரிவித்தும், பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும், வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

அப்போது சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த வருவாய் அதிகாரிகளிடம், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் வருவாய் தீர்வாயத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீதே நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படும் நீங்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள் என காரசாரமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது,

இதனை அடுத்து தற்போது நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயத்தில் மீண்டும் மனு அளிக்கும் மாறும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் நிலப்பட்ட கோரி மனு அளித்துள்ள கிராம மக்கள் இதே நிலை தொடர்ந்தால் அரசுக்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

பேட்டி ஜெயக்குமார்.

 

VIDEOS

Recommended