கடன் பிரச்சனையால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை.

ஆனந்த்

UPDATED: Aug 25, 2024, 5:50:22 PM

சென்னை

வளசரவாக்கம் திருவள்ளூர் சாலை காமகோடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமு என்கிற தாமோதரன் வயது 39 ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

இவர் திமுகவில் மதுரவாயல் தெற்கு பகுதி 152 வது வட்ட கழக நிர்வாகியாக உள்ளார் இந்த நிலையில் 3 லட்சம் ரூ கடன் பிரச்சனை காரணமாக நேற்று இரவு தாமேதரன் வசித்து வரக்கூடிய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

உடலை கைப்பற்றி வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தாமுவிற்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மேலும் தாமோதரன் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended