திருவள்ளூரில் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆடிட்டர் தற்கொலை

சுரேஷ் பாபு

UPDATED: Oct 25, 2024, 12:43:33 PM

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அடுத்த காக்களூர் லேக் வியூ அவென்யூ பகுதியில் வசித்து வந்தவர் ஏ.குமரகுரு (33) ஆடிட்டரான இவர் காக்களூரில் ஏ.கே.டெக்ஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளை செலுத்தி கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜிஎஸ்டி கணக்கு சம்மந்தமாக கடம்பத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஆடிட்டர் ஏ.குமரகுரு தன்னுடன் சேர்த்து 430 பேரிடம் ரூ. 100 கோடி மோசடி செய்ததாக புகார் கொடுத்தார்.

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து புதன்கிழமை ஆடிட்டர் ஏ.குமரகுரு திருவள்ளூர் எஸ்பி. அலுவலகத்தில் புகார் கொடுக்க வழக்கறிஞர்களுடன் வந்தார்.

அப்போது அங்கு வந்த பிரேம்குமார், என் மீதே புகார் கொடுக்க வந்திருக்கிறாயா... உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என பகிரங்கமாக மிரட்டி சென்றதாக ஆடிட்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் 10 லட்சம் ரூபாய் கேட்டு பிரேம்குமார் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆடிட்டர் தற்கொலை 

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மீண்டும் எஸ் பி அலுவலகத்திற்கு ஆடிட்டரால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கூறி பிரேம்குமார் எஸ் பி அலுவலகத்தில் மற்றொரு புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஆடிட்டர் குமரகுரு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த இவர் காலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Latest Thiruvallur District News Today In Tamil 

மேலும் அவரது வீட்டில் இருந்து அவரது தாயார் புகைப்படம் அருகில் ஆடிட்டர் குமரகுரு உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரில் 2.50 லட்சம் ரொக்கமும் லேப்டாப்பையும் பறிமுதல் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அடித்து தூக்கில் தொங்க விட்டார்களா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த மனைவி மஞ்சுளாவும் வீட்டிற்கு வந்தார்.

 

VIDEOS

Recommended