• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • துறையூர் அருகே வெங்கடேசபுரத்தில் மினி பேருந்து சாலை ஓர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்.

துறையூர் அருகே வெங்கடேசபுரத்தில் மினி பேருந்து சாலை ஓர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்.

JK

UPDATED: Jun 28, 2024, 12:26:39 PM

துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் மினி பேருந்து ஒன்று காவேரிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது பேருந்தை நாகமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.

பேருந்து வெங்கடேசபுரம் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இதில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended