மின் அழுத்த ஒயரில் இரும்பு பெயர் பலகை உரசியதில் அசோக் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி.

JK

UPDATED: Jul 25, 2024, 7:03:44 PM

திருச்சி 

கரூர் தேசிய நெடுஞ்சாலை குடமுருட்டி செக்போஸ்ட் அருகில் RR ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு கடந்த சில நாட்களாக பெயர் பலகை கழண்டு தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை RRஸ்போர்ட்ஸ் ஊழியர்கள் பெயர் பலகையை கழட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த கட்டத்தின் அருகே சென்ற உயர் மின் அழுத்த ஒயரில் இரும்பு பெயர் பலகை உரசியதில் தாராநல்லூரைச் சேர்ந்த டைலர் அசோக் என்பவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Latest District News in Tamil 

மேலும் அருகில் இருந்த ஊழியர் கோபி என்பவர் பலத்த காயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended