• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சங்கராபுரம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய போவதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு.

சங்கராபுரம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய போவதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு.

கோபி பிரசாந்த்

UPDATED: Jul 14, 2024, 6:01:50 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து அரசம்பட்டு கிராமத்தில் திமுக வை சேர்ந்த வாசுகி கருணாநிதி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

இவரது கணவர் கருணாநிதி என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் போல செயல்பட்டு வருகிறார்.

எதிர்த்து கேள்வி கேட்கும் வார்ட் உறுப்பினர்களை அடியாட்களை வைத்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் திமுக துணை தலைவர் மற்றும் வார்ட் உறுப்பினர்கள் அனைவரும் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகாரில் எங்களது ஊராட்சியில் நடக்கும் கிராம சபா கூட்டத்தில் அனைத்து வார்ட் உறுப்பினர்களையும் மிரட்டி கையெழுத்து வாங்குவதாகவும், அவர் கையெழுத்து போட தவறும் பட்சத்தில் தங்களது உறவினர்களை வைத்து அந்த விரட்டுவதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களுடைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

VIDEOS

Recommended