• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பழைய லைன் பாக்ஸ் முறையை தொடர வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கார்டு கவுன்சில் கோரிக்கை போராட்டம்

பழைய லைன் பாக்ஸ் முறையை தொடர வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கார்டு கவுன்சில் கோரிக்கை போராட்டம்

JK

UPDATED: Sep 24, 2024, 10:10:22 AM

திருச்சி 

அகில இந்திய ரயில்வே கார்டு கவுன்சிலின் சார்பில் கோட்டத் தலைவர் கிளாடி தினேஷ் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை கோட்டச் செயலாளர் ராஜ் துவங்கி வைத்தார்.

All India Guards Council

போராட்டத்தின் போது ரயில்வே கார்டுகள் பணி செய்ய தேவையான கொடிகள், கை சாமிக்குகள், விளக்குகள், LV கோடுகள், மினுக்கும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு போன்றவற்ற 30க்கு மேற்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கார்டு லைன்ஸ் பாக்ஸ் பெட்டியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் ஏற்றி இறக்கி வருகின்றனர்.

தற்போது இதனை மாற்றி லைன் கார்டுகள் டிராலி பேக் அறிமுகப்படுத்துவது எதிர்த்து பழைய லைன் பாக்ஸ் முறையை தொடர வேண்டும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் நிர்வாகிகள் காமேஸ்வரன் மற்றும் மத்திய சங்கத் துணைத் தலைவர்கள், ரயில்வே கார்டுகள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended