காட்டுபாக்கத்தில் நண்பரின் புதிய ஓட்டல் திறப்பு விழாவிற்கு ஆரவாரமின்றி வந்து  நடிகர் ஆர்யா.

ஆனந்த்

UPDATED: Aug 21, 2024, 7:22:09 PM

சென்னை

அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் புதிதாக ஓல்டு மிர்ச்சி பிரியாணி என்ற பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரியாணி கடையை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக காட்டுப்பாக்கம் வந்த நடிகர் ஆர்யா மிகவும் எளிமையாக வந்தவர் புதிய பிரியாணி கடையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்

திறப்பு விழாவிற்கு நடிகர்கள் வருவது என்றால் பேனர்களும், மேளதாளங்களும் முழங்க சிறப்பான வரவேற்புகளும் அளிக்கப்படுவது வழக்கம் ஆனால் நடிகர் ஆர்யா தனது நண்பரின் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு எந்த.வித ஆரவாரமும் இல்லாமல் எளிமையான முறையில் வந்து திறந்து வைத்துவிட்டு சென்றார்

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா வந்த பிறகு தான் அங்கு அவர் வந்திருக்கிறார் என அங்கிருந்த பலருக்கு தெரிய வந்த நிலையில் அவரை காண சிலர் வந்தனர் இருப்பினும் நண்பரின் பிரியாணி கடையை எளிமையான முறையில் திறந்து வைத்துவிட்டு அங்கு உணவு அருந்திவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்யா :

சென்னையில் ஒரு சிறந்த பிரியாணி கடை இதுவாகும் எனவும் காட்டுப்பாக்கம் பகுதி மக்களுக்கு ஸ்பைசியான பிரியாணி பெரிய ட்ரீட்டாக இருக்கும் என நடிகர் ஆர்யா பேட்டியில் தெரிவித்தார்..

 

VIDEOS

Recommended