குன்றத்தூரில் இளம் பெண் தற்கொலை. 20 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம். 

முருகன்

UPDATED: May 27, 2024, 11:10:20 AM

Chennai District News

சென்னையை அடுத்த குன்றத்தூர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மகள் கண்மணி (21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நகை அடகு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர். 

District News

இதற்கிடையே நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தனி அறைக்கு சென்றுள்ளார். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் கண்மணி அறைய விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட கண்மணிக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதற்காக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended