தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர் தூக்கு மாட்டி தற்கொலை.

JK

UPDATED: Jun 29, 2024, 12:38:50 PM

திருச்சி மாவட்டம், குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (38). இவர் திருச்சி மாவட்டம், மாத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு முதுகு வலி காரணமாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் திருச்சி வயலூர் சாலையில் உள்ள சீனிவாசநகர் பகுதியில் இயங்கி வரும் ஜெயரங்கா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆராய்ச்சி நிலையம் என்னும் தனியார் மருத்துவ மனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் ஒரு வார காலமாக சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை அறைக்கு மருத்துவர் சென்று பார்த்தபோது பாலசுப்பிரமணியன்  தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் பாலசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவரை கொலை செய்து விட்டனர் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended