• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 6, 2024, 3:45:56 PM

அகழாய்வு

வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறுகிறது. 

முன்னதாக சூதுபவள மணி, கண்ணாடி மணிகள் கல்மணிகள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை, பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி,கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு,அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 1700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

செங்கல் சுவர்

இந்நிலையில் தற்போது முழுமையான செங்கல் சுவர் இருந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் சிதைந்த நிலையில் செங்கல் சுவர் கண்டுபிடிக்கபட்ட நிலையில் தற்போது முழுமையான செங்கல் சுவர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Breaking News in Tamil 

இதன் மூலம் முன்னோர் இந்த பகுதியில் வாழ்ந்தற்கான அடையாளமும், இந்த முழுமையான சுவர் குடியிருப்பாகவோ அல்லது தொழிற்கூடமாகவோ இருக்கலாம் எனவும் முன்னோர்களின் வசிப்பிடமாக இப்பகுதி இருந்ததற்கான அடையாளம் என தொல்லியல் துறைனர் கூறுகின்றனர்.

 

VIDEOS

Recommended