மீன் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து அதில் கை வைத்திருந்த சிறுவன் பலி.

L.குமார்

UPDATED: Jun 2, 2024, 5:35:06 AM

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் போர்வெல் பணியினை செய்து வருபவர் மணிகண்டன் இவரது மூத்த மகன் எட்டு வயது ஆன ஹரிஷ் வீட்டில் உள்ள மீன் வளர்ப்பு தொட்டியில் கை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது அதிலிருந்து மீன்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் மோட்டாருக்கு செல்லும் மின்கம்பியில் கை பட்டு அதிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் நிலைதடுமாறி மீன் தொட்டியில் சிறுவன் ஹரிஷ் விழுந்து தண்ணீரில் மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்துக் கொண்டிருக்கும் போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் குழந்தையை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷ் ஏற்கனவே இறந்து விட்டான் என்று தகவல் அளித்தனர்.

அதன் பேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் ஒரு குழந்தை இறந்த இச்சம்பவம் பழவேற்காடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended