3 வயது பெண் குழந்தை இரவு 1 மணிக்கு தன்னந்தனியே நெடுஞ்சாலையின் நடுவே நடந்து வந்த கொடுமை.

முகேஷ்

UPDATED: Oct 26, 2024, 9:38:55 AM

Online News In Tamil 

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. 

இரவு சுமார் 1 மணி அளவில் திருச்சியை கடந்த போது அவ்வளவு பெரிய தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவே 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று கை கால்களில் சேறு அப்பிய நிலையில் தத்தி நடந்து சென்று கொண்டிருந்தது.

Online Newspaper

இதைப் பார்த்த திருநெல்வேலி ஆம்னி பேருந்து ஓட்டுனர் துளசி திடீர் பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்தியதோடு அல்லாமல், கிளீனர் சாம் குட்டியுடன் சென்று, வாகனங்களுக்கு நடுவே புகுந்து குழந்தையை தூக்கி காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். 

பின்னர் அருகில் காவல் பணியில் இருந்த போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended